மனைவியின் ஆவி!
அவர்கள் அன்னியோன்யமான தம்பதி.
சாகிற பொழுது “எனக்கு பின்னால், வேறு ஒருத்தியோடு வாழ்வதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இன்னொரு திருமணம் செய்தால், ஆவியாய் வந்து தொல்லை கொடுப்பேன்” என்றாள்.
மூன்று மாதத்திற்கு பிறகு ஒருத்தியை காதலிக்க ஆரம்பித்தான். அன்றிரவே ஆவி வர ஆரம்பித்தது. எங்கு சந்தித்தார்கள்? என்ன பேசிக்கொண்டார்கள்? என்பதை புட்டு புட்டு வைத்தது
ஒரு ஜென் துறவியை பார்க்க ஆலோசனை தந்தார்கள். எல்லாவற்றையும் கேட்டார். “சாதுர்யமான ஆவி தான். கை நிறைய புளியங்கொட்டைகளை எடுத்துக்கொள். இன்றிரவு ஆவி வரும் பொழுது “இதில் எத்தனை புளியங்கொட்டைகள் இருக்கிறது என கேள். இதற்கு பதில் சொல்லாவிட்டால் இனி அந்த ஆவி வராது” என்றார்.
அன்றிரவும் ஆவி தவறாமல் வந்தது. ”ஜென் துறவியை எல்லாம் பார்க்கிறாய்?” என்றது நக்கலாய். “இவ்வளவு பேசுகிறாயே! எத்தனை புளியங்கொட்டைகள் இருக்கிறது என சொல்? என்றார். ஆவியிடமிருந்து பதிலில்லை. அதற்கு பிறகு வரவும் இல்லை. ஆவிகள் கணக்கில் வீக்கா?
அவனுக்கு தெரிந்திருந்தது எல்லாம் ஆவிக்கும் தெரிந்திருக்கிறது. அவனுக்கு தெரியாதது ஆவிக்கும் தெரியவில்லை. அப்படி என்றால், ஆவி என்பது அவனுடைய மனப்பிராந்தி.
Illusion.
- "கதைகளின் வழியே ஜென்" புத்தகத்திலிருந்து...
No comments:
Post a Comment