Saturday, January 8, 2022

நூலக மனிதர்கள்

 நூலக மனிதர்கள் -  எஸ் ராமகிருஷ்ணன் 


எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூலக மனிதர்கள் எனும் புத்தகம்  என் கைக்கு தற்போதுதான் கிடைத்தது இதனைப் படிக்க வேண்டும் எனும் ஆவல் வெகு நாட்களாக எனக்கு இருந்தது 


தற்போது இதில் நான் படித்தது இரண்டு அத்தியாயங்கள் 

முதல் அத்தியாயம் -  படிப்பதற்கு பரிசு இரண்டாம் அத்தியாயம் -  தந்தையின் நிழலில்

 இந்த இரு அத்தியாயங்களை குறித்து தற்போது  எழுதப்போகிறேன். 


மனதிற்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தரும் எழுத்துக்கள் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களால் நமக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது


அவர்தான் பிறந்த மல்லாங்கிணறு எனும் கிராமப்புற நூலகத்தில் தொடங்கி மிகப்பெரிய நூலகங்கள் வரை படிக்க சென்றிருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மிக அருமையாக இப்புத்தகத்தில் எழுதியுள்ளார் 


படிப்பதற்கு பரிசு


அவர் மல்லாங்கிணறு நூலகத்தில்  நான் படித்துக் கொண்டிருந்த போது பார்த்து வியந்த சாமிநாத சர்மா என்னும் மஞ்சள் பை மனிதரைப் பற்றி தனது முதல்  அத்தியாயத்தில் கூறியுள்ளார் அவர் தான் படிக்க எடுத்துச்செல்லும் ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளேயும் அந்த புத்தகத்தை திருப்பி நூலகத்தில் செலுத்தும்போது ஒரு ரூபாய் நோட்டை உள்ளே வைத்து யாரோ ஒரு முகம் அறியாத வாசகன் இந்த நூலைப் படிப்பதற்கு பரிசாக வைத்துச் செல்கிறார் 


அவர் வைத்துச்  சென்ற பணத்தை தவறுதலாக வைத்து சென்றுவிட்டார் என்று நான் பலமுறை நினைத்தேன் என்று ஆசிரியர் கூறுகிறார் ஆனால் ஒவ்வொரு முறை அவர் திருப்பிச் செலுத்தும் எல்லா புத்தகங்களிலும் அப்பணம் இருப்பதை நான் கண்டேன் மேலும் அப்பணத்தை எடுத்து நான் செலவு செய்யத் தொடங்கினேன் எனக்கு அவர் ரகசியமான பரிசு தரும் தேவதை போல் தோன்றினார் என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார் முகம் தெரியாத அந்த வாசகனை அந்த மஞ்சள் பை காரர் தனது தோழனாக கருதுகிறார் 


அந்த மனிதருக்குள்ளும் விந்தை இருக்கிறது தான் மற்றவர்களைப் போன்ற ஒருவன் இல்லை தன் விருப்பங்கள் வேறு விதமானவை தனது வெளிப்பாடு வேறுவிதமானது என அவர் யோசிக்கிறார் எனவே அந்த நூலகத்திற்கு வந்த கடைசி நாள் வரை தான் படித்த புத்தகத்தில் ரூபாய் ஒன்றை வைத்து செல்கிறார்


 உண்மையில் இது ஒரு விளையாட்டு அந்த விளையாட்டின் வழியாக அறியாத ஒரு மனிதனை சந்தோஷப்படுகிறார் என்று ஆசிரியர் எழுதுகிறார் காதலிப்பவர்கள் தான் இப்படி புத்தகங்களில் ஆங்காங்கே சில எழுத்துக்களை வட்டமிட்டு விளையாடுவார்கள் ஆனால் இவர் செய்வது வேறுவிதமானது 


புத்தகங்கள் யாரை மகிழ்ச்சிப்படுத்தும் எவருடைய  வேதனையை ஆற்றுப்படுத்தும் என்று எழுத்தாளருக்கு தெரியாது ஆனால் புத்தகங்கள் சப்தமில்லாமல் மனிதர்கள் வளர்வதற்கும் சிந்திப்பதற்கும் ஆறுதல் அடையவும்  உதவி இருக்கின்றன என்பதே காலம் காட்டும் உண்மை என்று ஆசிரியர் விளக்குகிறார். 


தந்தையின் நிழலில்


விருதுநகர் பொது நூலகத்திற்கு ஒரு தந்தையும் 12 வயதுடைய அவருடைய பையனும் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் ஞாயிறு மாலையிலும் தொடர்ச்சியாக வருவார்கள் தந்தை நூலகத்தின் நீண்ட அடுக்குகளுக்குள் அந்த பையனை அழைத்துக் கொண்டுபோய் மெல்லிய குரலில் புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்து பேசிக்கொண்டிருப்பார் அந்த சிறுவன் தலையை ஆட்டியபடியே கேட்டுக் கொண்டிருப்பான் சில நேரம் பெரிய அட்லஸை அவன் கையில் எடுத்துக் கொடுத்து புரட்டிப் பார்க்க சொல்வார் அந்த காட்சி என் மனதை விட்டு அகலாத ஒன்றாக எனக்கு இன்றும் இருக்கிறது


 அந்த தந்தையும் மகனும் போல வேறு எவரும் இப்படி இணக்கமாக நூலகத்திற்கு வந்ததில்லை தன் மகன் எதிர்காலம் குறித்த தந்தையின் கனவு அவரது கண்களில் ஒளிர்வதை காண முடிந்தது


"சிறுவர்கள் புத்தகம் படிப்பதும் பெரியவர்கள் புத்தகம் படிப்பதும் ஒன்றில்லை சிறுவர்கள் புத்தகங்களுக்குள் எதையோ தேடுகிறார்கள் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளே அவர்களை வழிநடத்துகின்றன பெரியவர்களுக்கு கடந்த காலம் பற்றிய ஏக்கமே வாசிக்க வைக்கிறது அல்லது நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி ஆறுதல் தேடி புத்தகங்களை நாடுகிறார்கள் என்று ஆசிரியர் இங்கு விளக்குகிறார்


ஆரம்பநிலையில் நல்ல புத்தகங்களை தேர்வு செய்து வாசிக்கவும் வாசித்து அவற்றை விவாதிக்கவும் துணை தேவை தேவை அந்தப் பயிற்சியின் வழியே ஒருவன் ஆழ்ந்து வாசிக்க துவங்கிவிட்டால் பின்பு அவனை அந்த வெளிச்சத்தை உயர்த்திப் பிடித்து பயணிக்கத் தொடங்கி விடுவான் என்பதை ஆசிரியர் இங்கு விளக்குகிறார்


மற்ற வீடுகளில் உள்ள தந்தையைப் போல் மகன் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற கனவு இந்த தந்தைக்கும் இருந்திருக்கக்கூடும் ஆனால் அவரது மட்டும் முக்கியமில்லை என்று உணர்ந்திருக்கிறார் அவனது ஆளுமையை உருவாக்கவே  முயன்றிருக்கிறார் உலக வரைபடங்களை விரித்து வைத்து அவனுக்கு உலகின் மிகப்பெரிய கடல்களை விரல்களால் தொட்டுப் பார்க்க வைத்த அந்த தந்தை மிகவும் மகத்தானவர். 


சில நாட்கள் அந்த தந்தை மகனை ஊரில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன் பெரும்பாலும் கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பார்கள் பையனுக்கு நல்ல புத்தகங்களை நல்ல உரைகளை அறிமுகம் செய்யும் அந்த தந்தையை காணும் போது ஏக்கமாக இருக்கும் என்று மிகவும் ரசித்து ஆசிரியர் இந்த இடத்தில் விளக்குகிறார். 


நல்ல புத்தகங்களை நல்ல இசையை கலைகளை நல்ல மனிதர்களை அறிமுகம் செய்வதும் தந்தையின் கடமையே. அதை சரியாக செய்த மனிதராக நூலகத்திற்கு வந்த தந்தையை தான் பார்த்ததாக எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார். 


நான் மிகவும் ரசித்த வரிகள் சில


 சாமுராய்கள் வாட் பயிற்சி துவங்கும் போது வேகவேகமாக வலைவீசி சண்டையிடுவார்கள் எப்போதும் சண்டை வரும் என காத்திருப்பார்கள் வாள் வீச்சு பற்றி காரசாரமாக பேசிக் கொள்வார்கள் ஆனால் அனுபவம் மிகுந்த சாமுராய் தேவை இல்லாமல் வாளை வெளியே எடுக்க மாட்டான் எடுத்தாலும் ஒரே வீச்சில் வேலையை முடித்து விடுவான் அதைப் போலவே அவன் சண்டை செய்வதைப் பற்றி பேசவே மாட்டான் மவுனியாக இருப்பான் 

 

நீண்டகாலம் புத்தகம் படிப்பவர்கள் அப்படியான ஒரு நிலைக்கு சென்று விடுகிறார்கள் அவர்கள் அதிகம் விவாதிப்பதில்லை ஆனால் பேச வேண்டிய அவசியம் வந்தால் சுருக்கமாக அழுத்தமாக தனது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் அந்த மனப்பக்குவம் புத்தகம் உருவாக்கியதே. 


வெளிச்சம் மௌனமாகவே நமக்கு வழிகாட்டுகிறது புத்தகங்கள் செய்வதும் அது போன்ற ஒரு பணியே சொற்களை நம்மை ஆற்றுபடுத்துகின்றன சந்தோஷம் கொள்ள வைக்கின்றன துயரத்தில் துணை நிற்கின்றன மீட்சி தருகின்றன


 பேசக் கற்றுத் தருவதைப் போலவே படிக்க கற்றுத் தருவதும் பெற்றோரின் கடமையே. 


இந்த நூலில் இன்னும் முப்பது அத்தியாயங்கள் உள்ளன அவற்றைப் படித்து  எழுதுகின்றேன். 


நன்றி


சரோஜினி கனகசபை


No comments:

Post a Comment