Sunday, January 9, 2022

 நூலக மனிதர்கள் 

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்


 அத்தியாயம் 4 - புத்தக திருடன்


இந்த அத்தியாயத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு 30 வயது நபர் இரண்டு புத்தகங்களை நூலகத்திலிருந்து திருடி செல்கிறார். 

 மனம் போல் வாழ்வு என்ற ஜேம்ஸ் ஆலன் புத்தகம் மற்றும் எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள் எழுதிய எண்ணங்கள் எனும் புத்தகம் இவை இரண்டுமே சுய முன்னேற்றம் தொடர்பான நூல்கள் . 


புத்தகம் திருடி பிடிபட்ட ஒருவனை அன்றுதான் முதன் முதன்முதலாக பார்த்தேன் வேலையில்லாமல் இருப்பவனின் தோற்றம் அழுக்கடைந்து போன பேண்ட் முழுக்கை சட்டை ஆறடியை தொடும் உயரம் ரப்பர் செருப்புகள்  இதுதான் அந்த நபரின் தோற்றம் என்று எழுத்தாளர் ராமகிருஷ்ணன் விளக்குகிறார். 


புத்தகம் வாங்க முடியாத அவனின் நிலைதான் திருட வைக்கிறது அது தவறுதான் என்றாலும் திருடி படிக்கும் அளவு அவனுக்கு வாசிப்பில் விருப்பம் இருப்பதை யோசிக்க வேண்டியிருந்தது


புத்தகத் திருட்டு நடக்காத நூலகமே இல்லை சென்னை புத்தக கண்காட்சியில் எங்கள் அரங்கிற்கு ஒருவன் வருகை தந்து எனது உபபாண்டவம் நாவலை திருடிக்கொண்டு போனதோடு அப்படி திருடி வந்ததாக பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தான் இப்படியான வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார்


புத்தகங்களை சொந்தமாக்கிக் கொள்வதில் அடையும் மகிழ்ச்சி அபூர்வமானது அதை எளிதாக விளக்கி சொல்லிவிடமுடியாது சிலர் புத்தகத்தை இரவல் தரவே மாட்டார்கள் அது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் சிலரோ புத்தகத்தை கடனாக வாங்கி சென்றால் ஒருபோதும் திருப்பித் தர மாட்டார்கள்


 இது உண்மை எனக்கும் இதே போல் நடந்து இருக்கிறது நான் வாங்கிய காற்றில் யாரோ நடக்கிறார்கள் என்கிற திரு ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகம் மற்றும் வாழ நினைத்தால் வாழலாம் எனும் டாக்டர் ருத்ரன் எழுதிய புத்தகமும் என்னிடம் இருந்து யாரோ வாங்கிச் சென்று விட்டார்கள் இப்படி நிறைய புத்தகங்களை நான் இழந்திருக்கிறேன்

புத்தகங்கள் தொலைந்து போகும் போது மிகவும் வருத்தமாக இருக்கும்


ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் ஒன்றில் இப்படி நூலகங்களில் இருந்து புத்தகங்களை தேடி சேகரித்து ஒருவன் தனக்கென சிறிய நூலகம் ஒன்றை அமைத்துக் கொண்டது செய்தியாக வந்திருக்கிறது இதுதான் உலகின் விசித்திரமான நூலகம் என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்கள்


புத்தக அங்காடி களை அரசு உருவாக்கி மலிவு விலையில் நல்ல புத்தகங்களை தரலாம் ஒரு ஊருக்கு ஒரு புத்தக அங்காடியை அரசே நடத்தினால் பதிப்பாளர்கள் மற்றும் ஊரில் உள்ள மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராக கூடியவர்கள் ,பொதுமக்கள் அனைவரும் பயன் பெற இயலும் புத்த அங்காடிளை அரசசே ஏன் துவஙகக் கூடாது என்று இங்கு எழுத்தாளர் கேட்கிறார் இது  உண்மையிலேயே வரவேற்கத்தக்க கேள்வி. 


கேரளாவில் எழுத்தாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் இருக்கிறது அவர்களே நூல்களை வெளியிடுகிறார்கள் மாவட்ட நூலகங்களில் தனக்கு தேவையான நூல்களை வாங்கிக் கொள்கிறார்கள் புத்தக கடைகள் இல்லாத கோயில் வளாகங்களே அங்கு இல்லை இதை ஏன் நாமும் பின்பற்றக்கூடாது சிந்திக்க வேண்டிய கேள்விதான் இது


அத்தியாயம் 5  - கதையின் முடிவு


ஒரு நாவலுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் கஷ்டங்கள் தோல்விகள் வரலாம் ஆனால் கதையின் முடிவு எப்போதும் சுகமாக இருக்கவேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை வாசகர்கள் மனதில் இருக்கிறது சுபமான முடிவு இல்லாத கதைகளை வாசகர்கள் விரும்புவதில்லை காதல் கதையாக இருந்தால் மட்டும் துயரமான முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது


கதைகளைப் போல வாழ்க்கை இல்லை என்று வாசகர்களுக்குத் தெரியும் ஆனால் வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சி கதைகளில் கிடைக்கட்டும் என நினைக்கிறார்கள் அது தவறு இல்லை ஆனால் எல்லா கதைகளுக்கும் சுபமான முடிவை எழுதமுடியாது . நிஜம் அப்படி இல்லையே 


வெற்றிகளில் இருந்து கற்றுக் கொள்வதைவிட தோல்வியிலிருந்து அதிகம் கற்றுக் கொள்கிறோம் ஆசிரியரின் இக்கூற்று  மிகவும் எதார்த்தமான உண்மை என்று எனக்கு தோன்றுகிறது


எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தான் சந்தித்த மனிதர்களை குறித்து இங்கு விளக்குகிறார் . நாவல்களை மட்டுமே வாசிக்கும் ஒருவரை நானறிவேன் 50 வயது இருக்கும் ஒரு சாயலில் டி எஸ் பாலையா போன்ற தோற்றம் இருக்கும் அவசர அவசரமாக தான் நூலகத்திற்கு வருவார் நாவல்களை மட்டும்தான் எடுத்து படிப்பார் ஆங்காங்கே புத்தகத்தில் அடிக்கோடிட்டு அவரது கருத்தை கோபமாக எழுதியிருப்பார் அவரைப் பொருத்தவரை நாவல் சுலபமாக முடிய வேண்டும் இல்லாவிட்டால் அதை கடுமையாக விமர்சித்து எழுதி விடுவார் எழுத இடம் இல்லை என்றால் அந்த கடைசி பக்கத்தை கிழித்து எறிந்து விடுவார் இது அவரது வழக்கம் இதற்காக எத்தனையோ முறை நூலகத்தில் அதன் பொறுப்பாளர் இடம் திட்டு வாங்கியிருக்கிறார் 


அவருக்கு நாவல் என்பது வெறும் கதை இல்லை குடும்பத்து மனிதர்களைப்போல நிஜமானவர்கள் அவர்களுக்கு நடக்கிற சுகதுக்கங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது கதாபாத்திரங்களுக்கு முடிவில் நல்லது நடக்கும் போது அது தனக்கே நடப்பது போல் நினைத்துக் கொள்கிறார்


நல்லது நடக்க வேண்டும் என்ற நம்பிக்கை மனித மனதில் ஆழமாக பதிந்து போய் இருக்கிறது அதுவும் கதைகளில் நல்லது நடக்காத போது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை கிராமத்தில் நடக்கும் பாவைக்கூத்து கூட ராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிந்துவிடும் சீதையை ராமன் சந்தேகம் கொண்டு காட்டுக்கு அனுப்பியது , கானகத்தில் இன்னலுற்ற லவன், குசன் கதையோ சொல்லமாட்டார்கள்


நாவலின் கடைசி பக்கத்தை கிழிக்கும் மனிதருக்கு வாழ்க்கையில் இவ்வளவு பேரை சந்திக்கவும் அவர்களுடன் உறவாடவும் வாய்ப்பு  கிடைத்திருக்காது நாவல் தான் அவருக்கு பெரிய உலகை அடையாளம் காட்டியது


 சின்னஞ்சிறு ஊர்களில் வாழ்பவர்களுக்கு பெரிய உலகம் புத்தகம் வழியேதான் அறிமுகமாகிறது இன்றைக்கும் நாவலை மட்டுமே வாசிக்கும் பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு புத்தகம் என்றாலே நாவல்தான் போர்முனையில் பதுங்குகுழியில் இருந்தபடியே நாவல் வாசித்த ராணுவ வீரர்களை பற்றி படித்திருக்கிறேன் அவர்கள் நாவல் முடியக் கூடாது என்று ஆசைப்படுவார்களாம் என்று திரு ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்


ஒரு நாவலை ஆண் வாசிப்பதற்கும் பெண் வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது பெண்கள் நாவலில் உள்ள சின்னஞ்சிறு விஷயங்களைக்கூட நுட்பமாக கவனிக்கிறார்கள் அதேநேரம் சுபமான முடிவு தான் கதைகள் இடம் பெற வேண்டும் என்று கறாராக சொல்வதில்லை பெண்களின் வாழ்க்கையில் சுகமும் சந்தோசமும் அரிதானது ஆகவே அவர்கள் கதையில் வரும் கஷ்டங்களை ஒரு பெண் எப்படி எதிர்கொள்கிறாள் எவ்வாறு எதிர் வினை புரிகிறாள் எந்த இடத்தில் அவள் அங்கீகரிக்கப்படுகிறாள் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள் என்பதையே கவனிக்கிறார்கள் நாவலில் தனக்கு பிடிக்காத விஷயங்களை கடந்து போய் விடுகிறார்கள் நாவலின் முடிவுக்கு அப்பாலும் கதை இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிகிறது எழுத்துச் சித்தர் ஜெயகாந்தன்  அவர்களின் கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்களில் பெண்களின் சிந்தனையில் இந்த தெளிவை பார்க்கலாம்


 என்ன ஒரு சிந்தனை எழுத்தாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்களுக்கு! உண்மையிலேயே பெண்களின் மனம் எதனை சிந்திக்கும் எப்படி சிந்திக்கும் என்பதை மிகவும் எதார்த்தமாக  எழுதி இருக்கிறார். 


இறுதியில் புத்தகத்தோடு ஒருவன் கொள்ளும் உறவு விசித்திரமானது ஆழமானது அதனால்தான் எழுத்தாளனிடம் வாசகன் கோபமாக பேசும் போதும் கடுமையாக விமர்சனம் எழுதும் போதும் உரிமையாக கண்டிக்கும் போதும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்

 வாசகனை ஒருபோதும் எதிரியாக நினைத்தது இல்லை . எதன் மீது தான் மனிதர்கள் கோபம் கொள்ளவில்லை புத்தகம் மட்டும் விதிவிலக்கா என்ன என்று இந்த அத்தியாயத்தை முடித்துள்ளார் . 


நன்றி


சரோஜினி கனகசபை

No comments:

Post a Comment