Wednesday, March 19, 2025

 என் பார்வையில் காதல்

ஒவ்வொருவரது வாழ்விலும் திருப்புமுனையாக அமைவது காதல்தான். சிலரது வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு செல்லும், ஒரு சிலரது வாழ்வை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அது அவரவர் தேர்ந்தெடுக்கும் நபர்களைப் பொறுத்தே அமையும். 


அன்பு அனைத்தையும் மாற்றியமைக்கும் சக்தி பெற்றது. அதில் எந்தவித சுயநலமோ போலித்தன்மையோ இருக்காது.


இருவருமே எந்தவிதமான எதிர்ப்பார்ப்புமின்றி அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். நிபந்தனைகளற்ற அன்பே 

உறவுகளை வலுப்படுத்துகிறது.


தனது துணையின் மீது உண்மையான அக்கறை கொள்வதும், அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்வதும், கடினமான காலத்தில் அவர்களோடு இருப்பதும் மிகவும் முக்கியமாகும்.


தன்னால் முடிந்தளவு தனது துணைக்கு உதவியாக இருப்பது. அவர்களின் தேவை என்னவென்று மனோ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புரிந்து கொண்டு தனது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும். 


ஒரு உண்மையான காதலில் இத்தனை விடயங்களும் நிச்சயமாக இருக்கும். எனவே காதலிப்பது முக்கியமல்ல. உண்மையாக காதலிக்க வேண்டும் என்பதே முக்கியம். என் காதல் வாழ்க்கை எனக்கு இறைவன் 

கொடுத்த வரம்தான் 

 பெண்ணிய நாவல்கள் 

பெண்ணியச் சிந்தனை மரபினை இலக்கியவாதிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் படைப்புகளில் பதிவு செய்து வந்துள்ளனர்.


 மகாகவி பாரதி தொடங்கி புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன், ந.பார்த்தசாரதி, அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சமுத்திரம், பிரபஞ்சன், லெட்சுமி, சிவசங்கரி , இந்துமதி, இராஜம்கிருஷ்ணன், அம்பை, புதிய மாதவி போன்ற பெண் எழுத்தாளர்களும், பெண்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து 

மிக சிறப்பான படைப்புகளைப் படைத்துள்ளனர்.


தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் பிரதாப முதலியாரின் மனைவியாக வரும் ஞானாம்பாள், கல்வி கற்றவளாகவும், போராடும் குணம் உள்ளவளாகவும் காணப்படுகிறாள். காலம் காலமாக இருந்த பெண்ணடிமைச் சமூகத்தில் இருந்து விடுபடும் முதல் பெண்ணாக இவள் காட்டப்படுகிறாள்.


எம்.வி. வெங்கட்ராம் தம்முடைய ஒரு பெண் பேராடுகிறாள், நித்திய கன்னி ஆகிய நாவல்களைப் பெண்ணிய நோக்கில் எழுதியுள்ளார். 


தலித் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளைக் குறித்து பாமா எழுதிய ‘கருக்கு’ என்ற நாவல் ஒரு தலித் பெண்ணின் வாழ்வியல் பேராட்டத்தைக் பேசுகிறது.


கு.சின்னப்ப பாரதி எழுதிய 'சங்கம்' என்ற நாவல் மலைவாழ் பெண்களைச் சமூகம் எப்படி நடத்தியது என்பதைச் காட்டுகிறது. கந்து வட்டிக்குக் கடன் வாங்கித் திருப்பி அளிக்க முடியாத வெள்ளையன், தன் மனைவி கருமாயியைக் கடன்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய கொடுமையைச் சங்கம் எனும் நாவல் காட்டுகிறது.

               

இராஜம்கிருஷ்ணனின் 'தனிமை'  

என்ற சிறுகதையில்  படிக்காத சென்ற தலைமுறைப் பெண் சந்தித்த பிரச்சனைகள் பற்றி ஒருவிதமாகவும் இன்று படித்த பெண்கள் சந்திக்கும் சிக்கல்களை மற்றொரு விதமாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தை எதிர்த்து போராடும் போது பெண் தனிமைப்படுத்தப்படுவதையும்  சமூகத்தை மாற்ற முயலும் தொடர் நம்பிக்கை குறித்தும் இக்கதையில் கூறியுள்ளார். 


ஜோதிர்லதா கிரிஜாவின் 'அம்மாவின் அந்தரங்கம்' என்ற கதை பெண்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் , கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்தது போதும் என்பதைச் சொல்லிச் செல்கிறது. கணவன் தவறைப் பொறுத்துக் கொண்டு அடங்கி போக வேண்டும் என்பது கண்மூடித்தனமாக வழக்கம். கணவனின் நியாயமற்ற செயலை எதிர்த்து பெண்கள் குரல்கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இக்கதையின் மூலம் ஆசிரியர் கூறியுள்ளார். 


சுமதிரூபனின் 'அம்மா  இது என் உலகம்'   என்ற கதையில் விதவிதமான நகை, புடவை, கார் என்று வசதியுடன் பெண் இருந்தாலும் பெண்களுக்குச் சுயசிந்தனை , சுயமதிப்பு மிக முக்கியம் என்பதைக் கூறுவதாக இக்கதை உள்ளது. “புருஷனுக்காகச் சீலகட்டி ….. புருஷனுக்காக நகைபோட்டு அவனுக்காக சாப்பிட்டு அவனுக்காக சிரிச்சு அழுது தன்னைத் தொலைத்த அவலத்தை தாய் கூறியபோது”

இளையதலைமுறையாகிய ஆர்த்தி திருமணம் தன் தாயின் சுயத்தை அழித்துவிட்டதை உணர்வதாக ஆசிரியர் அமைத்துள்ளார்.


பாமாவின் 'பொன்னுத்தாயி' கதையில், பொன்னுத்தாயி படிக்காதவள் நான்கு பிள்ளைகளுக்குப் பிறகும் கணவன் குடித்துவிட்டு அவளை அடிக்கிறான். அவள் கூலியை அடித்து பிடுங்குகிறான். இது நாளும் தொடர்ந்த நிலையில் கணவனிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு வந்து சுயவியாபாரம் செய்து பிழைக்கிறாள் பொன்னுத்தாயி. தன்னை அடித்து இழுத்துப்போக வந்த கணவனை போலீசில் புகார் செய்கிறாள். கணவனே பிள்ளைகளை நீயோ வைத்து காப்பாற்று என்று கூற “பெத்தவதான் பிள்ளைகளை வளர்க்கனும்னு சட்டமா என்ன இங்கு கூட்டியறாத இனி நீ இந்த பக்கமே நீ தலயக்காட்டாத சொல்லிட்டேன் ஆமா“என்று கூறுகிறாள். இத்தொல்லைக்கு முற்றுப்புள்ளியாக தாலியை அறுத்து விடுகிறாள். அதிலுள்ள தங்கத்தை விற்று ஊருக்குள் கடையைத் திறந்து வியாபாரம் செய்கிளாள் என்று முற்போக்காக ஆசிரியர் கதையை முடித்துள்ளது கவனிக்கத்தக்கது. தனக்கான வாழ்வை தானே முடிவு செய்துகொண்டு வாழும் சுயசிந்தனையையும் இக்கதையில் பதிவு செய்துள்ளார்.


தமயந்தியின் 'விலங்களும் ஒரு விலாங்கு மீனும் ' என்ற கதையில், சித்ரா என்ற பெண் தான் விரும்பிய ஆணுடன் அவன் வீட்டிற்கு வந்து பார்க்கிறாள். அவன் வீடோ ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கி இருப்பதைப் புரிந்து கொள்கிறாள். காதலுக்காக அடிமை வாழ்வை விரும்பாத அவள் அந்த வீடு தனக்கு சரியாக வராது என்பதை அறிந்து அவனை நிராகரிக்கிறாள். திருமணச் சந்தையில் இதுவரை பெண்கள் நிராகரிக்கப்பட்ட சூழலில் முதன்முதலாக ஆண் நிராகரிக்கப்பட்டதைக் கூறுவதிலிருந்து பெண்களின் சுயசிந்தனை, சுயதைரியம் இக்கதையை படிப்பவரால் அறிந்து கொள்ள முடியும்


மேற்கண்ட கதைகள் பெண்கள் உடலால் அடிமைப்பட்ட நிலையையும் காயம்பட்ட அனுபவத்தையும் கண்ணீரால் வெளிப்படுத்துவதையும் தவிர்த்து எந்த சூழலிலும் சுயம் இழத்தல் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் கணத்த சொல்லாடல்களில்  அற்புதமாக அமைந்துள்ளது.


சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள், செயலாற்றத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்புநிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர்.


 ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், யுக சந்தி,  ஆகிய நாவல்களின் கதைத் தலைவி கங்கா, பெண்ணுக்கு ஏற்படும் அனைத்துச் சிக்கல்களையும் அடைந்து இறுதியில் கங்கையில் மூழ்கி மறைகிறாள்.


ஜன்னலில் காத்திருந்தே வயதாகிப் போன முதிர்கன்னியின் வாழ்க்கைப் பார்வையை கூறும் ' 'நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்'  


வறுமையைப் பொருட்படுத்தாமல் கணவனின் அன்பே பெரிதென வாழும் "ராசா வந்துட்டாரு' கன்னியம்மா, 


ஐந்து வருடங்கள் பிரிந்திருந்த சகோதரனைக் கண்டதும் பாசத்தில் திக்குமுக்காடும் "மெளனம் ஒரு பாஷை' சுசீலா, 


தன் கணவனாகவே இருந்தாலும் அவனுடைய அந்தரத்தில் தலையிடுவது காட்டுமிராண்டித்தனம் என தன் மகனிடமே கூறும் "அந்தரங்கம் புனிதமானது' ரமணியம்மாள், 


உடல் வளர்ச்சிகளில் குறை இருந்தாலும் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் "குறைப்பிறவி' செல்வி,


காலங்காலமாக விதவைகளுக்கென சமூகம் விதித்து வைத்திருந்த கட்டுகளை உடைத்து வெளியேறும் "யுகசந்தி' கீதா, விதவைப் பேத்தியின் மறுமணத்துக்கு முழு மனதோடு ஒப்புதல் வழங்கும் ‘யுகசந்தி’யின் பழைய தலைமுறைப் பாட்டி,


தவறுகள் குற்றங்கள் அல்ல’ சிறுகதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட மேலதிகாரிக்குப்  அவன் திருந்தி வாழ பெருந்தன்மையோடு மன்னிப்பு வழங்கும் ஸ்டெனோ தெரஸா,


ஜெயகாந்தன் அவர்களின் இப்படி எத்தனை எத்தனை பெண் பாத்திரங்கள்!  எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை அத்தனை கனமான கதாபாத்திரங்கள்! அத்தனையும் அற்புதமான வார்ப்புகள்!


காலங்காலமாக, பெண்கள் தினம் தினம் எதிர் கொள்ளும் இக்கட்டான சூழலை மிகவும் அழுத்தமாக புதிய மாதவி அவர்கள் கீழ்கண்ட கவிதை வரிகளில் எடுத்துரைக்கிறார்.


" காலில் குத்திய எல்லா முட்களையும்

காலம் எடுத்துவிடுவதில்லை.

பயணங்கள் அதனால் 

நின்றுவிடுவதும் இல்லை.

 

விட்டுக்கொடுத்தல்,  

சகிப்புத்தன்மை,

சமரசமாதல்  .....  

இதெல்லாமாக

அவள்மீது   நீங்கள் எழுதி இருப்பது

வாழ்க்கைத்துணை நல சூத்திரங்கள்.


 அதில் எப்போதும் அவளைப்

 பூஜ்யமாகவே வைத்திருப்பதன் மூலம்

 உங்கள் எண்களும் 

 தங்கள் ‘மதிப்பீடுகளை’

 உறுதி செய்து கொள்கின்றன.


 ஆம்.

 யுகம் யுகமாக 

 அவள் கதைகளைவிட 

 அவளின்   நிஜங்களே 

 பயமுறுத்துகின்றன."


இன்றும் கூட தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் பெண்கள் இருப்பதை நாம் பல்வேறு செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

இத்தகைய சூழலை எதிர்த்து நின்று சுய சிந்தனையுடனும்,  பொருளாதார சுய சார்புடனும், தன்னம்பிக்கையுடனும், உங்கள் பயணம் தொடரட்டும்! 


மகளிர் தின வாழ்த்துக்கள்!


அன்புடன் 

திருமதி சரோஜினி கனகசபை 

Tuesday, March 18, 2025

 https://theekkathir.in/News/articles/power-loom/comrade-a.p.-palaniswami,-who-has-class-consciousness-and-political-conviction---v.-stalin

Monday, March 17, 2025

 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

புத்தகங்கள் பேசுமா? ஏன் பேசாது நண்பர்களே?  என்னிடம் பேசிய நூல்கள் உங்களிடமும் பேசும் அல்லவா? 

என் மனதுடன் பேசிய நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின், என்னைக் கவர்ந்த 240 நூல்களுக்கான விமர்சனங்களை மூன்று நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளேன். என்னுடைய கீழ்க்கண்ட நூல்கள் புஸ்தகா பப்ளிகேஷனில் 25%தள்ளுபடியில் தற்போது கிடைக்கிறது. 

இந்த நூல் வாங்கலாம் - 

1.  பாகம் 1 & 2 

2. பாகம் 3 & 4

3. பாகம் 5 & 6

புஸ்தகா பப்ளிகேஷனின் இணைய தளத்திலும், அமேசான் தளத்திலும் இந்நூல் வெளிவந்துள்ளது. 

இந்த மூன்று நூல்களில் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் நூல்கள் குறித்த விவரங்கள் கீழே

1. சாண்டில்யன் 

ராஜபேரிகை

சந்திரமதி 

2. இமையம் 

எங்கதெ

செடல்

மண் பாரம் 

3. கவிஞர் வைரமுத்து 

தண்ணீர் தேசம்

வில்லோடு வா நிலவே 

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்  மூன்றாம் உலகப்போர்

கருவாச்சி காவியம்

காவி நிறத்தில் ஒரு காதல்

4. ஜெயகாந்தன் 

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் பாரிசுக்குப் போ

யுக சந்தி

யாருக்காக அழுதான் 

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் உன்னை போல் ஒருவன் 

ரிஷிமூலம் 

காத்திருக்க ஒருத்தி 

பிரம்மோபதேசம் 

நந்தவனத்தில் ஒரு ஆண்டி 

புதிய வார்ப்புகள் 

தவறுகள் குற்றங்கள் அல்ல 

பாவம் இவள் ஒரு பாப்பாத்தி 

யுகசந்தி சிறுகதை தொகுப்பு 

நான் ஜன்னல் அருகே உட்கார்ந்து இருக்கிறேன் 

ஜெயகாந்தன் 20 சிறுகதை தொகுப்பு

5. வெ. இறையன்பு

ஏழாவது அறிவு மூன்று பாகங்கள், வாய்க்கால் மீன்கள் 

பத்தாயிரம் மைல் பயணம் 

காற்றில் கரையாத நினைவுகள் 

6. எஸ் ராமகிருஷ்ணன் 

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

துணையெழுத்து

ஒரு சிறிய விடுமுறை கால காதல் பகலின் சிறகுகள்

புத்தனாவது சுலபம்

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

குறத்தி முடுக்கின் கனவுகள் 

நூலக மனிதர்கள் 

சிறிய உண்மைகள் 

கேள்விக்குறி 

காண் என்றது இயற்கை 

உணவு யுத்தம் 

உருபசி 

பாஷோவின் ஜென் கவிதைகள் 

காந்தியோடு பேசுவேன் 

எனது இந்தியா 

நிமித்தம் 

கடவுளின் நாக்கு 

துயில் 

ரயில் பயணங்களின் தோழமை 

இலக்கற்ற பயணி 

அவளது வீடு சிறுகதை தொகுப்பு

7. புதுமைப்பித்தன்

காஞ்சனை 

8. நா பார்த்தசாரதி 

குறிஞ்சி மலர்

9. அகிலன் 

சித்திரப்பாவை

பால்மர காட்டினிலே

பெண் 

பாவை விளக்கு

அலை ஓசை 

சிவகாமியின் சபதம்

நெஞ்சின் அலைகள் 

அவளுக்கு 

10. ரமாதேவி ரத்னசாமி

பதினாறு வயதினிலே 

11. ஜெயமோகன் 

குகை

ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபுகள்  வணங்கான் 

வெள்ளை யானை

யானை டாக்டர் 

நூறு நாற்காலிகள் 

காடு 

12. சுஜாதா 

எப்போதும் பெண்

தீண்டும் இன்பம்

பிரிவோம் சந்திப்போம்

ஸ்ரீரங்கத்து தேவதைகள் 

கற்றதும் பெற்றதும் 

ரத்தம் ஒரே நிறம் 

காந்தளூர் வசந்தகுமாரன் கதை 

ஆ.....

13. பிரபஞ்சன் 

மகாநதி

மரி என்கிற ஆட்டுக்குட்டி 

ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் 

பெண் 

மனிதர் தேவர் நரகர் 

இப்படியாக ஒரு சிநேகிதி 

14. தி ஜானகிராமன் 

முள்முடி

மோகமுள் 

15. பெருமாள் முருகன் 

கங்கணம்

பூக்குழி 

ஆலவாயன் 

மாதொருபாகன்

16. ஆயிஷா ஆர் நடராஜன் 

உலகப் பெண் விஞ்ஞானிகள் 

ஆயிஷா

17. மதன் 

கிமு கிபி 

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் வந்தார்கள் வென்றார்கள் 

18. G. சியாமளா கோபு 

அந்தப்புரத்தில் ஒரு நந்தவனம் 

மணி முடியும் உடைவாளும்

19.  ஜி நாகராஜன் 

நாளை மற்றொரு நாளே

20. நெய்வேலி பாரதி குமார் 

முற்று பெறாத மனு 

புத்தரின் பேராசை பல்

21. வண்ணதாசன் 

உயரப் பறத்தல்,  

ஒரு சிறு இசை 

22.வண்ண நிலவன் 

எஸ்தர்

ரெயினிஸ் ஐயர் தெரு 

23. வைக்கம் முகமது பஷீர்

மதில்கள் -  

24. ல.சா.ராமாமிர்தம்

அபிதா 

25. ருத்ரன் 

உறவுகள் 

26. தி. வள்ளியப்பன் 

சடகோவின் கொக்கு 

27. சிவசங்கரி 

புளியந்தளிர் 

பாலங்கள்

ஒரு சிங்கம் முயலாகிறது

28. பாலகுமாரன் 

அப்பம் வடை தயிர்சாதம்

தலையணை பூக்கள்

தாயுமானவன்

உடையார்  5 பாகங்கள் 

கடலோரக் குருவிகள் 

29. பாமா 

கருக்கு

மனுஷி 

30. நாஞ்சில்நாடன் 

தலைகீழ் விகிதங்கள்

சதுரங்க குதிரை

சூடிய பூ சூடற்க 

31. புதிய மாதவி 

சிறகொடிந்த வலசை 

பச்சைக் குதிரை 

ஐவருமாய் 

மஃபி

பெண் வழிபாடு 

ஐந்திணை

32. கமலதாஸ் 

என் கதை 

33. பொ. கருணாகர மூர்த்தி 

அனந்தியின் டயறி 

34. ஹெப்சிபா ஜேசுதாசன்

மானீ

புத்தம் வீடு  

35. ஆ மாதவன் 

தூவானம் 

36. சோ தர்மன் 

சூல்

கூகை 

37. எம் டி வாசுதேவன் நாயர் தமிழில் குறிஞ்சி வேலன் 

இரண்டாம் இடம்

38. சி ஜே ஷாஜகான் 

கனவுகள் காத்திருக்கின்றன 

39. இரா.முருகன்

திணை அல்லது சஞ்சீவினி

40. தஸ்தாயெவ்ஸ்கி 

வெண்ணிற இரவுகள் - தமிழில் கிருஷ்ணய்யா 

41. எஸ் எல் பைரப்பா 

பருவம் - தமிழில் பாவண்ணன் 

பிளவு - தமிழில் ஜெயா

 வெங்கட்ராம்

42. பா ராகவன் 

மூன்றெழுத்து

43. என் ராமகிருஷ்ணன் 

ஜென்னி காரல் மார்க்ஸ்

44. கு அழகிரிசாமி 

அன்பளிப்பு 

ராஜா வந்திருக்கிறார்

45. சுந்தர ராமசாமி 

ஜேஜே சில குறிப்புகள்

46. சு. ஆ வெங்கடசுப்புராய நாயகர்

சூறாவளி 

ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை 

வாழ்வு இறப்பு வாழ்வு 

பெருந்தொற்று 

வீழ்ச்சி 

இல்லறவாசிகள்

47. எஸ் கிருஷ்ணன் 

சேர சோழ பாண்டிய பல்லவர் கால கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

48. கி ராஜநாராயணன் 

பெண் கதைகள்

49. இந்துமதி 

தொடுவான மனிதர்கள் 

விரலோடு வீணை 

தரையில் இறங்கும் விமானங்கள் 

50. அக்களூர் ரவி 

மகாராஜாவின் பயணங்கள்

51. கபிலன் வைரமுத்து 

அம்பறாத்தூணி

52. ஹென்றி ஒய்ட்ஹெட்  - வானதி 

தென்னிந்திய கிராம தெய்வங்கள்

53. கணேசகுமாரன் 

பித்து

54. தயாஜி 

அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல 

பொம்மி கவிதைகள்

55. பிருந்தா சாரதி 

முக்கோண மனிதன் 

56. நாகரத்தினம் கிருஷ்ணா 

பிரான்ஸ் நிஜமும் நிழலும் 

சைக்கோன் புதுச்சேரி 

காஃப்காவின் நாய்க்குட்டி 

நீலக்கடல் 

ரணகளம் 

57. நிவேதா லூயிஸ் 

கலகப் புத்தகம்

58. கரிச்சான் குஞ்சு 

பசித்த மானுடம்

59. பாவண்ணன் 

சிதறல்கள் 

முள் 

பாய்மரக்கப்பல் 

பச்சைக் கிளிகள் 

என் வாழ்வில் புத்தகங்கள் 

60. சார்வாகன் 

கனவுக்கதை 

யானையின் சாவு

61. கலாப்ரியா 

மாக்காளை

வேனல்

62. மு மேத்தா 

சோழ நிலா

63. மு து பிரபாகரன் 

அடையாற்றுக்கரை

64. எம் கோபாலகிருஷ்ணன் 

மனை மாட்சி 

மணல் கடிகை

65. இந்திரா பார்த்தசாரதி 

குருதிப்புனல்

66. சித்தார்த்தன் சுந்தரம் 

செர்னோபிலின்குரல்கள்

67. பவா செல்லத்துரை 

சொல்வழி பயணம்

68. வாஸந்தி 

மூங்கில் பூக்கள்

69. அ. முத்துலிங்கம் 

குதிரைக்காரன் 

அமெரிக்கக்காரி 

பிள்ளை கடத்தல் காரன் 

70. தமிழ்ச்செல்வன் ரத்தன பாண்டியன் 

அசோகச் சக்ரா

71. பிரமிள்

சூரியன் தகித்த நிறம்

72. அழகிய பெரியவன் 

தேநீர் மேஜை கட்டுரைகள்

73. குட்டி ரேவதி 

விரல்கள்

74. கந்தர்வன் கதைகளின் தொகுப்பு 

75. யூமா வாசுகி 

ரத்த உறவு 

76. கண்மணி குணசேகரன் 

கோரை 

அஞ்சலை

77. சிரா 

சேரன் தலை கொண்ட வீரபாண்டியன் சோழச்சூரியன் பாகம் 1

78. ச சுப்பாராவ்

மீண்டெழும் மறு வாசிப்புகள் 

மதுரை போற்றுதும் 

சொற்களைத் தேடும் இடையறாத பயணம் 

79. அதிஷா 

சொல் அல்ல செயல்

80. பழனி பாரதி 

காற்றின் கையெழுத்து 

81. விட்டல் ராவ் 

கால வெளி 

கலை இலக்கிய சங்கதிகள் 

வண்ண முகங்கள்

82. உதயச்சந்திரன் 

மாபெரும் சபைதனில்

83. அகிலா 

அறவி

தவ்வை

84. தேவி பாரதி 

நீர்வழிப் படூஉம்

85. கண்ணன் 

நதி தொலைந்த கதை

86. ஜெயா நவி

விழுமம் 99

87. பூமணி 

கொம்மை

88. ஜெயந்தி சங்கர் 

மனப்பிரிகை 

வாழ்ந்து பார்க்கலாம் வா

89. ஆதவன் 

என் பெயர் ராமசேஷன்

90. உஷா சுப்ரமணியன் குறு நாவல்கள் 

91. வ கோகுலா

காக்கைச் சிறகினிலே பறவைகளின் வண்ணமயமான உலகம் 

92. ஜி ஏ பிரபா 

வேத வாழ்வில் பெண் குரல்

93. ராஜம் கிருஷ்ணன் 

சேற்றில் மனிதர்கள் 

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

94. தஞ்சை தவசி 

நிழலற்ற தூரம்

95. அம்பை 

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதை தொகுப்பு

சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பு 

96. ரமணிச்சந்திரன் 

தொடுக்கோடுகள்

97. நா முத்துக்குமார் 

அணிலாடும் மூன்றில்

98. மோகனா சுகதேவ் 

நான்மாடக் கூடல் நாயகி 

பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்

99. கமலா முரளி 

இந்துமதி கல்யாணம் எப்போ

100. மகாதேவன் 

லேடிஸ் ஸ்பெஷல் ரூட் நம்பர் 13

101. எம் வி வெங்கட்ராம் 

நமக்குள் இருக்கும் இருள் வெளி

102. யுவன் சந்திரசேகர் 

கடல் வற்றும் நாளில் மீன்கள் கால்களால் நடந்து போகும்

103. சுப்ர பாரதி மணியன் 

சப்பரம்

மேற்கண்ட நூல்கள் பிரிண்டெட் காப்பி வேண்டுவோர் புஸ்தகா பப்ளிகேஷன் / அமேசான் அல்லது என்னுடைய தொலைபேசி whatsapp 9790713509   எண் மூலம் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன் 

திருமதி சரோஜினி கனகசபை.