Monday, August 2, 2021

விசாரணை கவிதை

 



‘விசாரணை-சோவியத் காதல் கவிதை 


‘என் காதலா உனக்கு வேண்டும்?’

— ‘ஆமாம்’

‘என் காதல் கறை படிந்தது’

–‘பரவாயில்லை’

‘உன்னிடம் சிலவற்றை உரைக்க வேண்டும்’

— ‘நல்லது! உரைக்கலாம்’

‘உன்னிடமிருந்து சிலவற்றைத்

தெரிந்து கொள்ள வேண்டும்!’

–‘கேள்!’

‘நான் உனக்கே உரியவளானால்…’

— ‘மிகவும் நல்லது!’

‘நீ எனக்குத் தேவைப்பட்டால்….’

–‘கடைக்கண் காட்டினால் போதும்’

‘உன்னை நான் ஏமாற்றிவிட்டால்…’

— ‘பொருட்படுத்தமாட்டேன்’

‘ஆபத்து ஏற்பட்டால்….’

— ‘தலை கொடுக்கவும் தயார்’

‘பாடச் சொன்னால்….’

— ‘பாடுவேன்’

‘ஒரு நண்பனை இழக்கச் சொன்னால்….’

— ‘பாதகமில்லை’

‘யாரையாவது கொல்லச் சொன்னால்…’

— ‘கொன்று விடுவேன்’

‘உன்னைச் சாகச் சொன்னால்…’

— ‘செத்து விடுவேன்’

‘நம் கப்பல் நாசமாகிவிட்டால்….’

— ‘நீ நீரில் மூழ்க விடமாட்டேன்’

‘வலி வேதனைக்கு அஞ்சமாட்டாயா?’

— ‘அஞ்சமாட்டேன்’

‘தடையாக ஒரு சுவர் இருந்தால்…’

— ‘அதைத் தகர்த்தெறிவேன்’

‘ஒரு முடிச்சு இருந்தால்…’

— ‘அதை வெட்டிவிடுவேன்’

‘என்றென்றும் என்னை நீ நேசிப்பாயா?’

— ‘சாகும் வரை நேசிப்பேன்’

‘என் காதலா உனக்கு வேண்டும்?’

— ‘ஆமாம், ஆமாம்’

‘இளைஞனே!

ஒரு போதும் உன்னை நான்

நேசிக்க மாட்டேன்’

— ‘ஏனோ?’

‘நான் அடிமைகளை விரும்புவதில்லை!’

———– ராபெர்த் ரஷ்தேஸ்த்வென்ஸ்க

No comments:

Post a Comment