‘விசாரணை-சோவியத் காதல் கவிதை
‘என் காதலா உனக்கு வேண்டும்?’
— ‘ஆமாம்’
‘என் காதல் கறை படிந்தது’
–‘பரவாயில்லை’
‘உன்னிடம் சிலவற்றை உரைக்க வேண்டும்’
— ‘நல்லது! உரைக்கலாம்’
‘உன்னிடமிருந்து சிலவற்றைத்
தெரிந்து கொள்ள வேண்டும்!’
–‘கேள்!’
‘நான் உனக்கே உரியவளானால்…’
— ‘மிகவும் நல்லது!’
‘நீ எனக்குத் தேவைப்பட்டால்….’
–‘கடைக்கண் காட்டினால் போதும்’
‘உன்னை நான் ஏமாற்றிவிட்டால்…’
— ‘பொருட்படுத்தமாட்டேன்’
‘ஆபத்து ஏற்பட்டால்….’
— ‘தலை கொடுக்கவும் தயார்’
‘பாடச் சொன்னால்….’
— ‘பாடுவேன்’
‘ஒரு நண்பனை இழக்கச் சொன்னால்….’
— ‘பாதகமில்லை’
‘யாரையாவது கொல்லச் சொன்னால்…’
— ‘கொன்று விடுவேன்’
‘உன்னைச் சாகச் சொன்னால்…’
— ‘செத்து விடுவேன்’
‘நம் கப்பல் நாசமாகிவிட்டால்….’
— ‘நீ நீரில் மூழ்க விடமாட்டேன்’
‘வலி வேதனைக்கு அஞ்சமாட்டாயா?’
— ‘அஞ்சமாட்டேன்’
‘தடையாக ஒரு சுவர் இருந்தால்…’
— ‘அதைத் தகர்த்தெறிவேன்’
‘ஒரு முடிச்சு இருந்தால்…’
— ‘அதை வெட்டிவிடுவேன்’
‘என்றென்றும் என்னை நீ நேசிப்பாயா?’
— ‘சாகும் வரை நேசிப்பேன்’
‘என் காதலா உனக்கு வேண்டும்?’
— ‘ஆமாம், ஆமாம்’
‘இளைஞனே!
ஒரு போதும் உன்னை நான்
நேசிக்க மாட்டேன்’
— ‘ஏனோ?’
‘நான் அடிமைகளை விரும்புவதில்லை!’
———– ராபெர்த் ரஷ்தேஸ்த்வென்ஸ்க
No comments:
Post a Comment