என்னை நான் எவ்வளவோ
கட்டுப்படுத்தி வெளியே சிரித்தாலும் ...
ஏமாற்றங்களால் ஏற்ப்பட்ட
காயங்கள் உள்ளுக்குள்
வலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
என்னை வற்புறுத்தி கட்டாயபடுத்தி
யாராலும் எதுவும் செய்து விட முடியாது
என்று நினைத்திருந்தேன்.
ஏனோ நான் என்னை அறியாமலே
இரக்கப்பட்டு எல்லாவற்றையும்
மற்றவர்களுக்காக விட்டுக்
கொடுத்து விடுகிறேன்.
நான் முடிவெடுப்பதை பார்த்தால்
அறிவாளி போல் இருக்கும்.
அன்புக்காக ஏங்கி அடிமையாகும்
அடி முட்டாள் தான் நான்
என்னை நான் இதுவரை
திருப்திபடுத்தியதில்லை
என் ஒவ்வொரு காலப்பகுதியும்
என் அன்பை ஒவ்வொருவருக்கு
பங்கிட்டு கொடுக்கிறது.
என் கூட இருப்பவர்கள் சந்தோசமாய்
இருந்தால் நான் என்னை இழப்பதில்
பெருமை அடைவேன்.
ஆனால் அவர்கள் நலன் மட்டுமே
முக்கியமாகக் கருதி
வாழ்கிறார்கள் என்று நான்
உணரும் போது கிடைக்கும்
தனிமையில் நான்
என்னை வருத்துகின்றேன்.
என்னதான் நான் என்னை
சமாதானப்படுத்தி சந்தோசமாக
இருப்பதாக காட்டிக்கொண்டாலும்
சில பொய்களும் துரோகங்களும்
என்னை தினமும் உள்ளுக்குள்
அழவைத்து கொண்டுதான் இருக்கிறது.
No comments:
Post a Comment