சிறுவயதில் விதவையான பெண்களை
நிரந்தரமான விதவைகளாக
வைத்திருப்பதற்கு எல்லா ஏற்பாடுகளை யும்
இந்த சமூகம் செய்து வைத்திருக்கிறது.
"அவ புருசன் செத்து பத்து வருச
மாச்சு. எந்த ஆம்பளையையும் ஏறெடுத்தும்
பாக்கமாட்டா. நாக்குமேல பல்லப் போட்டு
ஒரு வார்த்த அவளப் பேசிற முடியாது.
எதுக்கும் எடம் கொடுக்கமாட்டா நெருப்பு
மாதிரி இருப்பா"என்று ஒரு பெண்ணைச்
சொல்லிசொல்லியே மனோ ரீதியாக
அவளைப் பலவீனப் படுத்தி
"புனிதம்"என்னும் புதை
குழிக்குள் அவளைத் தள்ளி விட்டு
விடுகிறார்கள்.
அவளுக்கு மறுமணம்
குறித்த சிந்தனையே எழாதவாறு அவ்
வளவு ஜாக்கிரதையாகப் பார்த்துக்
கொள்கிறார்கள் .
அவளும் அவளை அறியாமலேயே
அந்த "புனிதத்திற்குள்"
சிக்கி தன்னுடைய ஆசாபாசங்களைச்
சாகடித்துக் கொள்கிறாள்.
மூடநம்பிக்கையென்பது
சாமியாடுவது மண்சோறு
சாப்பிடுவது அலகுகுத்தி ஆடுவது
மட்டுமல்ல இதுவும் ஒருவகையான
மூடநம்பிக்கைதான்.
No comments:
Post a Comment