Wednesday, July 21, 2021

சிறிது வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன்

 


காதலின் விசித்திரம் புரிந்துகொள்ள முடியாதது.20 வயதில் தோன்றும் காதல் இயற்கையானது. 


ஆனால் ,நடுத்தர வயதில் தோன்றும் காதல் ? அதை எப்படி எதிர்கொள்வது.எப்படிக் கடந்து செல்வது? 45 வயதில் ஏற்படும் எதிர்பாரத காதல் ,

பல ஆண்களைத் தடுமாற வைத்திருக்கிறது.தவறான முடிவுகளுக்கும் கொண்டு சென்றிருக்கிறது.


அதேபோலவே 30 ஐக் கடந்த பெண்ணுக்கு ஏற்படும் காதலும். குடும்பம் ,கணவன் ,குழந்தைகள் என்ற இயல்பான உலகில் இருந்து அவளை வெளியேற்றுகிறது. அவளது அன்றாட வாழ்வு சிடுக்கும் சிக்கலும் ஆகிவிடுகிறது.


குடும்பத்துக்காகவும் , சமூக கட்டுப்பாடுகளுக்காகவும் பெண்ணோ ,ஆணோ தங்களது ரகசிய காதலை வெளியே சொல்லாமல் இருக்கக்கூடும். 


ஆனால் , நடுத்தர வயதில் திடீரென காதல்வசப்படுவது பலருக்கும் நடந்தேறி இருக்கிறது. அதை அவர்கள் எதிர்கொண்ட விதமும் பின்விளைவுகளும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் கசப்புமானவை.


தங்கள் வயதை மறந்து அவர்கள் நடந்துக்கொள்ளும் விளையாட்டுத்தனம் ஒரு பக்கம் என்றால் ,மறுபக்கம் தங்கள் வயதை நினைத்து அவர்கள் போடும் வேஷங்களும் ஒளிவுமறைவுக்களும் இந்தக் காதலை குழப்பத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன.அல்லது ஆறாத மன வலியை, ஏமாற்றத்தைத் தருகின்றன.


நடுத்தர வயதின் காதல் , அற்ப நாளில் முடிந்து போய்விடும் சிலந்திவலை போன்றது என்று அறிந்தே காதலிக்கத் துவங்குகிறார்கள். 


பல நேரங்களில் அதை கைவிட முடியாமல் தொடரவும் முடியாமல் சிக்கிக்கொண்டு துயரப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment