கூடை வியாபாரியை
அழைத்து,
கொள்முதல் விலையையும்
விசாரித்து..........
துணிந்து கேட்ட விலைக்கு
பணிந்தது வறுமை,
படிந்தது அடாவடி
பேரம்............
சொன்னதில் பேர்பாதி
விலை கேட்டு,
இரண்டொன்று கூடவே
இலவசமும் பெற்று,
பணம் கை மாறும் போது
சிரித்துக் கொண்டே
சில்லரை இல்லையென கூறி
மேலும் இரண்டு ரூபாயை
குறைத்து.........
அடடா,
விந்தை உலகின்
விசித்திர மனிதர்களே,
எங்கே கற்றீர்கள் இந்த
பஞ்சதந்திர மந்திரத்தை..........
வேதனை சுமந்து
வெறுங் கூடையுடன்
செல்லும் இவர்களின்
நாளைய முதலீட்டிற்காய்
சற்று கருணையைக்
காட்டுங்கள்.
No comments:
Post a Comment