விசாவிற்காக காத்திருக்கிறேன்
பி. கே. அம்பேத்கார்
பெரிய தத்துவங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை.. பிற சமூகத்தவர்கள் பசித்தால் சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம்.. தாகம் எடுத்தால் அருகில் இருக்கும் கடையில் தண்ணீர் வாங்கி குடிப்போம்.. ஒரு இடத்திற்கு போக தனியாக வண்டி அமைத்துக் கொள்வோம்.. சட்டையில் ஒட்டிய அழுக்கை அருகில் இருக்கும் ஏதோ ஓர் நீர்நிலையில் கழுவுவோம்.. கால் வலித்தால் அங்கிருக்கும் நாற்காலியில் உட்காருவோம்.. காசிருந்தால் தங்க இடம் கிடைக்கும்..
இவை அனைத்தும் இரண்டு மடங்கு காசிருந்தாலும் 'தீண்டத்தகாதவர்' என்று சமூகம் கூறிய காரணத்தினால் அம்பேத்கருக்கு மறுக்க படுகிறது.. இந்த அனுபவத்தினை சிறுவயதில் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறார்.. நாம் பிரஞ்யையே இல்லாமல் செய்யும் மேற்கண்ட ஒவ்வொரு செயலையும் அவர்கள் காத்திருந்து, பயந்து, யோசித்து, மறைந்து செய்ய வேண்டியுள்ளது.. சில நேரங்களில் அப்படியும் செய்ய இயலாமல் போகிறது..
இன்றும் இந்நிலைகள் முற்றாக மாறிவிடவில்லை.. தொடரும் தீண்டாமை குற்றங்கள் குறைந்தபாடில்லை.. புது வடிவம் எடுத்துள்ளதென்று வேண்டுமானால் கூறலாம்.. புத்தகத்தில் வரும் அம்பேத்கரின் சொற்கள் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..
மதங்களை கடந்து இந்தியாவில் தீண்டத்தகாதவர் அனைவருக்கும் தீண்டத்தகாதவராகவே இருக்கிறார்.. இவற்றையெல்லாம் தன் வாழ்வின் அனுபவங்களில் இருந்து எடுத்து கூறுகிறார் அம்பேத்கர். அது மிகப்பெரிய தத்துவமாகிப் போகிறது!
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.. மிகவும் பாரமான ஒரு உணர்வை கொடுத்துள்ளது இந்த நூல்..
No comments:
Post a Comment