Wednesday, July 21, 2021

உன்னை அறிந்தால்

பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்றே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே நம்மில் பலரின் எண்ணமாக உள்ளது 

இதுதான் இயற்கையின் திட்டமா ?

எதற்கு இந்த பிறப்பு ?

 என்னில் இருக்கும் நான் யார்?

 நான் என்னவாக இருக்க வேண்டும் இத்தகைய கேள்விகள் ஒரு காலகட்டத்தில் எல்லோர் மனதிலும் வந்து போகும் 

சிலர் மட்டுமே அதற்கான விடையை தேட தொடங்குகிறோம்  வெகு சிலர் மட்டுமே விடையை கண்டடைகிறோம்

தன்னை அறிதலின் அவசியமும் முக்கியத்துவமும் ஒருவரின் வாழ்வை மேன்மை அடையச் செய்யும் 

இப்பிறப்பின் காரணத்தை அறிய முற்படும் போது ஞானம் பிறக்கிறது ஞானத்தின் வழி நிற்கையில் தெளிவு பிறக்கிறது 

நாம் கடந்து வந்த வாழ்க்கை பாதை நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது

 நமக்கு கிடைக்கும் வாய்ப்பை உணராமல் செல்வோம் எனில் வாழ்வின் மீது நம்பிக்கை பிறக்காது 

தன்னை அறிந்து கொள்ள நம் திறமையை நாம் முதலில் தெரிந்து கொள்ளல்  அவசியம். நம் திறமையை அறிந்து கொள்வது எப்படி?

 எந்த செயலில் நமக்கு இயற்கையாகவே ஈடுபாடு அதிகம் இருக்கிறதோ அதனை மெருகேற்ற வேண்டும் 

நமது கவனம் தொடர்ந்து அதில் செலுத்தப்பட வேண்டும் மற்றவர்களில் இருந்து அது நம்மை பிரித்துக் காட்ட வேண்டும் 

எப்போது நமது எண்ணத்தோடு ஒன்றென அச்செயல்  கலக்கிறதோ அன்றிலிருந்து அது நமக்கு தனி அடையாளத்தை தர ஆரம்பிக்கும் 

நமக்கான வாய்ப்பை நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் .பொறுமை விழிப்புணர்வுடன் காத்திருக்க வேண்டும் .

வாய்ப்பு கிடைத்தவுடன் செயல்திறனுடன் அசாத்தியமான சாதனைகளை நோக்கி நம் மீதான நம்பிக்கையை பலப்படுத்தி செயல் புரிதலின் மூலம் நல்ல வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் 

கிடைக்கப்பெற்ற வாய்ப்பை திடமாய் பிடித்து எல்லை யில்லா அர்ப்பணிப்புடன் இடைவெளி இல்லா ஈடுபாட்டுடன் வெற்றி தோல்வி என்ற வட்டத்திற்குள் சிக்காமல் உழைப்பை அதிகரித்தல் அவசியம்.

 உழைப்பிற்கான பலன் சில நேரங்களில் தாமதம் அடையலாம்! 

முழுமையான பலன் விரைவில் நம்மை வந்தடையும் எந்த சாதனையும் நம்மால் சாத்தியமே 

நம்மை நாம் அறிந்திருந்தால்

No comments:

Post a Comment