Thursday, August 26, 2021

புத்தனாவது சுலபம் - எஸ். ராமகிருஷ்ணன்

 


சிறுகதை என்பது நீந்திக் கொண்டிருக்கும் மீனைச் சித்திரம் வரைவது போன்றது, அது ஒரு சவால் என்று தோழர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 பல சிறுகதைகள் உள்ளடக்கிய இந்த நூல் 'புத்தனாவது சுலபம்' . 

வேறுபட்ட கோணங்களில் எழுதியிருக்கிறார், ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் நெஞ்சைத் தொடும் கனமான ஒரு கிளைமேக்ஸ் வைத்து எழுதியுள்ளார். 


'இரண்டு குமிழ்கள்' எனத் தொடங்கும் சிறுகதை கைதி சபீனா மற்றும் பெண் போலிஸ் நிர்மலா பற்றிய ஒரு தொடர் என்று சொல்லலாம். செய்யாத குற்றத்திற்காக சபீனாவை கோர்ட்டு வரை கொண்டு செல்வார்கள். மிக அழகான மனதை தொட்ட கதை. 


'பொய்த்தொண்டை' சிறுகதையில் வரும் வைத்தி அண்ணா கதை சில உண்மையான நிகழ்வுகளை நினைவுக் கூறியது . படித்ததில் பிடித்தது மற்றும் வைத்தி அண்ணாவிற்கு ஏன் இந்த நிலை என்று வருந்தும் அளவுக்கு இருந்தது. 


இறுதியாக காதலின் பிடியில் சிக்கிய கோகிலவாணியின் கதை, காதலித்தவனும் கிடைக்காமல், தன்னைக் காதலித்த ஒருவன் கொண்ட அன்பினால் ஆசிட் வீசும் அளவிற்கு பரிதாபமான நிலையை அடைகிறாள் கோகிலவாணி. 


 காதல் என்றால் வசை, அடி, உதை, எரிப்பு, கொலை இவைதான் காதலின் சின்னங்களா? வன்முறையில்தான் காதல் வேர் ஊன்றியிருக்கிறதா? என்ற நினைவுடன் ரயிலின் பயணத்தில் இருட்டிற்கு கண்கள் முளைத்து அவள் அழுவதைப் பார்த்துக்கொண்டே செல்கின்றன இரண்டு மின் மினிப்பூச்சிகள். 


இளவம்பஞ்சு ஒருபோதும் காற்றைக் கண்டு பயப்படுவதில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டுப் பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. காற்றில் பறந்து உலகின் முடிவற்ற நிலப்பரப்புகளை நோக்கி அது பயணிக்கிறது. 

பிள்ளைகளும் அப்படித்தான். அவர்களுக்கு வீடு போதுமானதில்லை. உலகை நோக்கி பறந்து போகவே செய்வார்கள். அதைத் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான். ஆனால் உலகம் தான் கடைசியில் வெல்லுகிறது. 


இந்த நூலில் அமைந்துள்ள அனைத்து சிறுகதைகளும் ஏதோ ஒன்றை சொல்லிக்கொடுக்கும். 


எப்படி இந்த சமூகத்தில் பெண் பிள்ளைகள் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அவர்களின் நிலை, வாழ்க்கை முறை, தைரியமான நடை, சில நேரங்களில் நினைக்கத் தோன்றும் முதிர்ச்சி அடைந்த குணத்துடன் முன்னேறி செல்கிறார்கள் என்று. 


அவரவர் வாழ்க்கையில் நிகழும் சின்னச் சின்ன நிகழ்வுகளை எவ்வாறு  கடந்து செல்ல வேண்டும் என்ற ஒரு முழு உணர்வு ஏற்படும் கதைகளின் இறுதியில். மிக அருமையான நூல். படித்ததில் மகிழ்ச்சி. 


No comments:

Post a Comment